Tuesday, May 20, 2025

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவித்தல்.

2023.03.03 ஆந் திகதி காலை 5.00 மணி தொடக்கம் மு.ப 10.00 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும்தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.
 கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவானில் இருந்து காலை 6.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
 குறிகட்டுவனில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய இரு வழிப் பயணக் கட்டணம் ரூபாய் 2000 ஆகும்.
 வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2023.03.03 ஆந் திகதி பி.ப 6.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்
04.03.2023 ஆந் திகதி கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவானது இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா எதிர்வரும் 2023.03.03 மற்றும் 2023.03.04 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles