மருதமடு கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மாலை வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் அருட்பணி.செ.அன்ரன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் தேசிய மகளிர் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
பிரதம விருந்தினராக அருட்பணி. எஸ்..றொனிஸ் நிமல் வாஸ் மற்றும் விருந்தினர்களாக அருட்சகோதரி. பிரான்சிஸ் மேரி லொஜோலானா, யாக்கோப்பு கிறிஸ்ரியான் மற்றும் மருதமடு பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெண்கள் இளைஞர் யுவதிகள் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
குறுகிய காலத்தில் நீங்கள் சட்டத்துறையில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா ???
இந்நிகழ்வின் போது சிறப்புரை ஆற்றிய யாக்கோப்பு கிறிஸ்ரியான் கூறுகையில்
சமகால உலகில் பெண்கள் தமது ஆளுமை நிறைந்த பண்புகளால் பல்வேறு தலைமைத் துவங்களை தாங்கி தன்னிகரில்லா முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர்.
இவை மட்டும் இல்லாது தேசிய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவதை நாம் காண்கின்றோம்.
எனவே நாமும் எமது பிரதேசங்களில் கிராமங்களில் தலைமைத்துவ பண்புகளை ஏற்று சமூக நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக யாதெனில் பெண்கள் அனைவரும் இன மத வேறுபாடுகளை கலைந்து கிராமிய பாரம்பரிய விளையாட்டுகளில் மிகவும் உற்சாகமாக கலந்து சிறப்பித்த தோடு பாடசாலை மாணவர்களும் இளைஞர் யுவதிகள் அனைவரும் இந்நிகழ்வில் மகிழ்வுடன் பங்குபற்றினர் .