இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.
குறுகிய காலத்தில் நீங்கள் சட்டத்துறையில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா ???
குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.
இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள்,உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச் செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











