Tuesday, May 20, 2025

ரமழான் தலைப்பிறை தென்படவில்லை:- மார்ச் 24 அதிகாலை இலங்கையில் நோன்பு ஆரம்பம்

இலங்கையின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை மறுநாள் (24) வெள்ளிக்கிழமை அதிகாலையே இலங்கையில் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (22) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக்குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1444 இற்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததன் காரணமாக, ஷஃபான் மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து, புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மார்ச 24ஆம் திகதி ஆரம்பிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளிட்ட பிறைக்குழுவினர் உத்தியோகபூர்வமாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நீங்கள் சட்டத்துறையில் வல்லுநர் ஆக விரும்புகிறீர்களா ???

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles