கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக மே மாதம் 15ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர சாதாரணதரபரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, மே மாதம் 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான பரீட்சையை அன்றைய தினம் நடத்த முடியாத நிலை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மே 29 ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர சாதாரணதரபரீட்சையை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.