கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாச்சிக்குடா பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் மெசிடோ நிறுவனம் ஏற்பாடு செய்த இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(21) மாலை நாச்சிக்குடா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள்,நாச்சிக்குடா பகுதியில் உள்ள தமிழ் முஸ்ஸீம் மக்கள்,பொலிஸ் அதிகாரிகள்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதனைத் தொடர்ந்து நோன்பு பெருநாளை கொண்டாடும் சுமார் 90 குடும்பங்களுக்கு 3500 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








