‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் எண்ணக்கருவுக்கு அமைய சமூக ஆர்வலரும் கிராம அலுவலருமான எஸ்.லுமாசிறி அவர்களின் முயற்சியில் இன்றைய தினம் (23) ஒரு தொகுதி மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் வசித்து வரும் அவரது நண்பரின் நிதிப் பங்களிப்பில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது.