Monday, May 12, 2025

(PHOTOS)யாழ். நெடுந்தீவில் மக்கள் போராட்டம்-பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை.

 யாழ். நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (24)  நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மனுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை, நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தால் ஒவ்வொரு சமூகத்திடமும் பொலிஸ் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கையில்,

நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட நெடுந்தீவு இடங்களை ரோந்து பணியினூடாக கண்காணிப்பதற்கு இடைவிடாது ஒவ்வொரு நாளும் பொலிஸ் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவின் சுற்றுலா தளங்களுக்கு ஒவ்வொரு நாளும் சென்று நெடுந்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.

வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தல் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

நெடுந்தீவுக்கு உள்ளே வரும் வெளியே செல்லும் மக்களின் தரவுகளை நவீன தொழில்நுட்பத்துடன் கொண்டு பயணிகளை சிரமப் படுத்தாது அதிவிரைவாக தரவுகளை இறங்கு துறையில் வைத்து சேமித்து கொள்ளும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles