

நாட்டின் சம கால பொருளாதார நிலைமைகளைக் கருத்திற் கொண்டு விவசாயத்தினை தமது ஜீவனோபாயத் தொழிலாக முன்னெடுத்து வரும் குடும்பங்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்காதர் மஸ்தானின் வேண்டுகோளின் பெயரில் (ILO) நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள், தனியார் கூட்டு உற்பத்தித் திட்டத்தின் மூலம் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்க்குட்பட்ட இசைமாளத்தாழ்வு கிராமத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டது.செய்கைப் பன்னப்பட்ட நிலக்கடலை பயிரானது நேற்று செவ்வாய்க்கிழமை(2) அறுவடை செய்யப்பட்டது.கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்புடன் அறுவடை செய்யப்பட்டது.
இதன் மூலம் பெறப்பட்ட அறுவடை மூலம் பெறப்பட்ட நிலக் கடலையினை உரிய முறையில் பிரித்து எடுத்து பதப்படுத்தும் இயந்திரம் ஒன்று குறித்த பகுதி கமக்கார அமைப்புகளிடம் இராஜாங்க அமைச்சர் கையளித்து வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டிமெல், மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு, மேலதிக பணிப்பாளர் திரு. மெரின் குமார், (ILO) நிறுவனத்தின் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.