Wednesday, May 21, 2025

(PHOTOS)மன்னாரில் கடும் மழை-மக்களின் இயல்பு நிலை பாதிப்பு- மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகான் சுத்தப்படுத்தும் நடவடிக்கை  மந்த கதியில் ….

 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது.

இன்று (3) புதன்கிழமை காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.
மேலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு,பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.இந்த நிலையில் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் நகர சபை பகுதியில், மன்னார் நகர சபையினால் முன் னெடுக்கப்பட்டு வந்த கழிவு நீர் வடிகான் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மந்த கதியில் இடம் பெற்று வருவதன் காரணத்தினால் வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளி நீர் வடிந்தோட முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles