மன்னாரில் காணி சட்டம் தொடர்பான இலவச ஆலோசனை நாளை செவ்வாய்க்கிழமை (09)மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் மாலை 2. மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம் பெற உள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ ) ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற காணி ஆணையாளர் திரு.க.குருநாதன் அவர்களால் காணி பிணக்குகள் மற்றும் புதிய காணி சட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட இருக்கின்றது.
ஆகவே காணி பிணக்குகள் உடைய நபர்கள் கலந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள 076-0722252 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.