மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மன்னார் நகர சபைக்குச் சொந்தமான பொது மலசல கூட தொகுதிக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்ட நீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது குறித்த மலசல கூட தொகுதி உரிய முறையில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகர சபையினால் குறித்த மலசல கூட தொகுதி இவ்வருடம் குத்தகைக்கு விடப்பட்டது.குறித்த மலசல கூடத்தை பெற்றுக்கொண்ட குத்தகைதாரர் மாத மாதம் மன்னார் நகரசபைக்கு குத்தகை பணமாக 70 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றார்.
எனினும் மன்னார் நகர சபை குறித்த மலசல கூடத்தை இவ்வருடம் குத்தகைக்கு விடும் முன் கடந்த வருடத்திற்கான நீர் பட்டியலை முழுமை படுத்தாது புதிய நபருக்கு குத்தகைக்கு வழங்கி உள்ளனர்.இதன் போது நீர் பட்டியலின் நிலுவை சுமார் 2 லட்சத்திற்கும் மேல் காணப்பட்டுள்ளது.
-இதனால் சில தினங்களாக குறித்த மலசல கூட தொகுதி மூடப்பட்டது.பின்னர் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து பவுசர் மூலம் நீர் வழங்கப்பட்டு குறித்த மலசல கூட தொகுதி திறக்கப்பட்டது.நீர் முடிவடைந்தவுடன் மூடப்படுகின்றது.
-இதனால் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.