மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை,பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் எதிர் கொள்ளும் மனநல நீதியான பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொகுப்பு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேலிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.சிரேஸ்ர சமூக செயற்பாட்டாளர் பேதுரு பெனடிக்ற் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த ஆய்வு தொகுப்பின் இறுதி வடிவம் மேற்படி வைபவ ரீதியாக இன்று (26) கையளிக்கப்பட்டுள்ளது.
