பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி இன்றைய தினம் (2) வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த புதன்கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உள் வீதி உலா இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பாலாவி தீர்த்தத்தை நோக்கி ஆரோகித்ததை தொடர்ந்து தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது.இத் தீர்த்த திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏழு வருடங்களின் பின் தீர்த்தத்திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






