தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்குவதற்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் அடங்கிய சிம் அட்டையை தமக்கு வழங்க உத்தரவிடுமாறு அவரது மனைவி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன், தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடைய சிம் அட்டையை அவரது மனைவியிடம் வழங்க முடியுமா என்பது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு அறியப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நாளை மறுதினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது டன் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.