Monday, May 12, 2025

(PHOTOS)மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால்  தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் கையளிப்பு.

 அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் மன்னார்  ஏயிட் குழுக்களின் (Mannar Aid Groups) நிதி அனுசரணையில், மன்னார் மாவட்டத்தில் கடந்த 38 வருடங்களாக நலிவுற்ற மக்களுக்கு மனித நேய பணி புரிந்து வருகின்ற மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் (ம.து.ம.ச) வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு இன்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் தலைவர் அருட்தந்தை ரி.நவரட்ணம் அடிகளாரின் ஒருங்கமைப்பில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வருகின்ற, தெரிவு செய்யப்பட்ட 26  குடும்பங்களுக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தில் மூன்றாம் கட்டமாக, உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (06) காலை 11 மணிக்கு  மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் செயலாளர்  .எஸ்.ஏ.ராதா பெர்னாண்டோவின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில்,நானாட்டான் பங்குத்தந்தை அருட்பணி. சுரேஸ்கரன் றெவ்வல்,  கற்கிடந்த குளம் பங்குத்தந்தை  அருட்பணி . எ. டெஸ்மன் அஞ்சலோ, நானாட்டான் உதவி பிரதேச செயலாளர் செல்வி  துஸ்சியா சிவதரன், மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்  உப செயலாளர் .சூசைநாயகம் றெவல் ,  மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் நிர்வாக உத்தியோகத்தர்  திருமதி.ச.சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles