பொலன்னறுவை, மனம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 40 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதித்தனர்
அதேவளை உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.