வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும் நபரை வவுனியா நகரில் நேற்று (02) மதியம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
அதில் கடுமையான எரி காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இறந்த பெண்ணின் கணவனான ச. சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும் நபரை வவுனியா நகரில் நேற்று (02) மதியம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு வருவதுடன் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் அவர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்.