Friday, May 16, 2025

(PHOTOS)வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டியில் நீர் குழியில் விழுந்து இருவர் மரணம் -பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல்

 வவுனியா வலய மட்ட விளையாட்டுப் போட்டியானது  வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர் குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்று வியாழக்கிழமை (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவரு கையில்,,,,,,வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.மைதானத்தில் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இடம்பெற்றபோது மைதானத்தின் அருகில் காணப்படும் நீர் குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.மாணவர்கள் விழுந்ததை அவதானித்தார்கள் கடமை இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோருடன்  இணைந்து குறிந்த மாணவர்களை மீட்டுள்ளனர்.

மீட்க்கப்பட்ட இரு மாணவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும்,  அவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்கு முன்பே இறந்துள்ளார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பவத்தை அறிந்து பல்கலைக் கழகத்திற்கு சென்ற வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன்   மீதும்,தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அவ்விடத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குவிந்திருத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணைவேந்தரை பாதுகாப்பாக பல்கலைகழகத்திற்கு அழைந்து சென்றதுடன்,  பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தார்.

குறித்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தை சேர்ந்த 14 மற்றும் 15  வயதுடைய மாணவர்களே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles