Wednesday, May 21, 2025

மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து- ஒருவர் மரணம்.(PHOTOS)

 மன்னார் – தலைமன்னார் பிரதான  வீதியில் பயணித்த இரு வாகனங்கள்  மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் நேற்று திங்கள்  (21) மாலை  மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் தலை மன்னார் பொலிஸ் பிரிவு பருத்திப் பண்ணையில் இடம் பெற்றுள்ளது.குறித்த விபத்து தொடர்பாக  மேலும்  தெரிய வருகையில்,,

தலை மன்னார் ஊர் மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மனோகரன் நிசாந்தன் பேசாலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தனியாக தனது கிராமமான தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போது வெளி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் தலைமன்னார் ஊர் மனையிலிருந்து மன்னாருக்கு வந்த போது இரண்டு வாகனங்களும் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.மேலும் விபத்துக்கு உள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிசில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணை யை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles