

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட அரசியல் பிரதி நிதிகளும் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி க்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக ஓ.எம்.பி அலுவலக வீதியை சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கருத்துக்கள் வெளியிடப் பட்டதோடு,மகஜர் பொது வெளியில் வாசிக்கப்பட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையிலான அருட்தந்தையர்களிடம் கையளித்தனர். குறித்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.