2023 ம் ஆண்டுக்கான நவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் இந்து சமய வளர்ச்சி சங்கம் மன்னார் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையே சைவ சமய அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் பாலர் பிரிவு, கீழ் பிரிவு ,மத்திய பிரிவு,மேற்பிரிவு என வகைப்படுத்தி பண்ணிசை, பேச்சு,வினா விடை போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான சைவ சமய அறிவுப் போட்டிகள் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் நாளை (08) ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வி.செல்வக்குமரன் தெரிவித்தார்.