சிறந்த வைத்திய நிபுணராக வந்து மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்கால லட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி எஸ்.சுவஸ்திகாயினி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
எஸ்.சுவஸ்திகாயினி ஆகிய நான் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்று இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 174 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளேன்.
நான் மன்னார் உப்புக்குளத்தில் வசித்து வருகின்றேன்.
எனது சாதனைக்கு பாடசாலை ஆசிரியர் க.பிரதீபன் அவர்களும் எனது பெற்றோரும் உறுதுனையாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
