ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னி மாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.இதையடுத்து வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்,அவருடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.இதேவேளை கைது செய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிவாவுக்கு இன்றைய தினம் போராட்டம் எதையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(photos)வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது போலீசார் பலப்பிரயோகம்!! இருவர் கைது- வவுனியாவில் பதட்ட நிலை!
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது போலீசார் பலப் பிரயோகத்தை முன்னெடுத்தது டன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது.