ஐக்கிய இராஜ்ய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்படும் தேசிய மரபுரிமைத் திங்கள் நிகழ்வு 07/01/24 அன்று கிரிஸ்டல் ஹைலைட்ஸ் பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.தமிழர் பாரம்பரியம், சமகால அரங்காற்றுகை, தமிழர் பாரம்பரிய கலை நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்கள், பாரம்பரிய உணவு வகைகள், பேச்சு ஆடல் பாடல் மற்றும் சிலம்பம் என்பவற்றுடன் கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வுகளுடன் இலங்கைத் தமிழர்கள் ஒரு கால வரையறையற்ற பாரம்பரியம் எனும் சிறப்பு கண்காட்சியானது தமிழ் தகவல் நடுவம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் என்பவற்றின் ஐக்கிய இராச்சிய மரபுரிமை சமூகத்தினால் அதன் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய பன்மைக்கால கலாச்சார சூழலில் ஒரு சமூகத்தின் பண்பாடு மரபுரிமைகளை விளங்கிக் கொள்வதற்கு அது சார்ந்த சமூக வரலாற்றை புரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.
தமிழ் மொழியால் இணையக்கூடிய இளம் தலைமுறையினரும் மற்றைய இனத்தவர்களும் தமிழ் பண்பாட்டின் மரபுரிமைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவற்றை பேணி பாதுகாப்பதற்கும் இந்நிகழ்வுகள் மிக அவசியமாகும்.
கண்காட்சியின் போது தமிழர்களின் பண்டைய வரலாறு தமிழர் கலாச்சாரம் தமிழர்களின் தொன்மைக்கால வாழ்வியல் அம்சங்கள் தகவல்கள் மற்றும் பொருள்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஈழத் தமிழர்களின் வாழ்வியல் சார் அம்சங்கள் வாழ்வியல் அமைப்புகள் தரைத்தோற்ற அம்சங்கள் இன மத மொழி அடையாளங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சியை பார்ப்பவர்களுக்கு அது சார்பான அறிவியலையும் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றையும் வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் அமைந்திருந்தது.
பலர் இக் கண்காட்சியை பார்வையிட வருகை தந்ததுடன் இக்கண்காட்சியை ஒழுங்கமைத்த TIC மற்றும் CCD அமைப்புகளுக்கும் நன்றி பாராட்டினர்.
NEWS ,PHOTOS BY :- டிலக்ஷன் மனோரஜன்