Tuesday, May 13, 2025

யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த 29 வயது  இளைஞரை காணவில்லை!

யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த 29 வயது  இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து குறித்த இளைஞன் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞர் காணாமல் போன நேரத்தில் மஞ்சள் நிற டீ சேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை  அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரைப் பற்றிய தகவல் தெரிந்தாலோ அல்லது  இவரை எங்காவது கண்டால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அல்லது  இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான  0772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு  உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles