இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம் பெறும் ஒத்திகை நிகழ்வில் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விபத்துக் குள்ளாகியுள்ளனர்.கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று( 30) இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.பராசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பராசூட் கள் மோதி விபத்துக்குள்ளான தாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.