கனடா – ஒட்டோவா படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் விவரங்களை கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,
ஒட்டோவா பிராந்தியத்தில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் தொடர்பில் அடையாளம் கண்டுள்ளோம்.மேலும், பொலிஸாரின் சந்தேகத்தின் பேரில் அவர்களுடன் ஒரே வீட்டில் இருந்த இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டீ சொய்சா என்ற 19 வயதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளோம்.இந்நிலையில் கனடாவிற்கு அண்மையில் குடிபெயர்ந்த அக் குடும்பத்தினரின் பெயர் விபரம்,
ஜீ காமினி அமரகோன் (40), தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யக (35) – தாய், இனுக விக்ரமசிங்க (7) – மகன், அஷ்வினி விக்கிரமசிங்க (4)- மகள் ரினியானா விக்ரமசிங்க (2) -மகள், கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பலியானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்ததோடு, கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.