Wednesday, May 21, 2025

போராளிகள் நலன்புரி சங்க தலைவர் செ.அரவிந்தன்  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!

 வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம்(26) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு செல்லாத நிலையில் நேற்றைய தினம்(26) மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்றைய தினம் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு சென்ற சமயமே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles