மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட கடல் அட்டைகளை இடமாற்றம் செய்த 05 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (4) நடைபெற்றுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.மேலும் 589 கடல் அட்டைகள் 03 மோட்டார் சைக்கிள் மற்றும் டைவிங் கியர்களையும் கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர்

மீன்பிடி நடைமுறைகளை பொருட்படுத்தாமல் மக்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடற்படையானது தீவின் கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS புஸ்ஸதேவ கடற்படைப் பிரிவின் அச்சங்குளம் முகாம் கடற்படை வீரர்கள் அச்சங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக சந்தேகத்தின் பேரில் 03 மோட்டார் ஸ்கூட்டர்களை சோதனையிட்டதில் 589 கடல் அட்டைகள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் அடைத்து கடத்தப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 23 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 05 பேரும் கடல் அட்டைகள் டைவிங் கியர் மற்றும் 03 ஸ்கூட்டர்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.