Monday, May 12, 2025

 

பேசாலையில் பகற்கொள்ளை, பல லட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம் திருட்டு.

மன்னார் பேசாலைப் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் (22/05)திங்கள், காலை பத்து மணியளவில் பேசாலை பகுதியிலுள்ள வீடொன்றிலேயே,இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் வசித்து வரும் கணவன் மனைவி இருவரும் பணியின் நிமித்தம் வெளியே சென்றபின்னர் கதவை உடைத்து,மேற்படி கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி உட்பட சுமார் பதின்மூன்றரைப் பவுண் நகைகளும்
ஐம்பதாயிரம் ரூபா பணமும் களவாடிச் செல்லப்பட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளபோதிலும்
சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை.பொலிசார் இது குறித்து ,தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles