மன்னார் மாவட்ட அபிவிருத்தி அலுவலர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(23/05) பகல் 12 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன்பாக இடம்பெற்ற இப்போராட்டத்தில் அதிகளவான பெண் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஏழாயிரத்து ஐநூறு ரூபா சம்பள அதிகரிப்பு, மற்றும் அடிப்படை வசதிகளை அரசாங்கம் கருத்திற் கொள்ள வேண்டுமெனவும் பதின்மூன்று வருடங்களாக வழங்கப்படாதிருக்கும் பதிற்கடமைகளுக்குரிய கொடுப்பனவுகளை வழங்கக்கோரியும்
மேற்படி சுகவீன  விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரார்கள் தெரிவித்தனர்.

மேற்படி போராட்டமானது நாடளாவிய ரீதியில்,உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி அலுவலர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!