இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானியக் குடியுரிமையை கொண்டவர் எனவும், அதனால் அவர் இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் உத்தரவிடக்கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.