Tuesday, May 13, 2025

‘ சீ கான் ‘ பட்டத்தை பெற்றுக்கொண்ட மன்னார் கராத்தே பயிற்சி நிறுவன தலைவர் ம.அன்ரனி இன்பராஜ்

யாழ்ப்பாணம் YMCA இல் நடைபெற்ற கராத்தே நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த சிவப்பு பட்டி ஆசிரியர் கென்சி K.V.றவி வடமாகாணத்தில் கராத்தேயில் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பரீட்சை ஒன்றினை நடாத்தியிருந்தார்.

இலங்கையில் வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டு, 5 வது கறுப்பு பட்டி பெற்றுள்ள மாணவர்களுக்கு ” சீ கான் ” பட்டத்தை வழங்கியிருந்தார். இவ் பட்டமானது கராத்தே பயிற்சி வழங்கும் ஆசரியர்களுக்கு அவர்களது தரம் உயர்த்தப்பட்டடு வழங்கபபடும் சிறந்த விருதாகும்.

அந்த வகையில் கடந்த 25 வருட காத்திருப்பிற்கு பின்னர் மேற்படி பட்டத்திற்காக நடாத்தப்பட்ட பரீட்சையில் தனது விடா முயற்சியாலும் , பயிற்சியாலும் சித்தியடைந்து மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக   மன்னார் கராத்தே பயிற்சி நிறுவன தலைவர் ம.அன்ரனி இன்பராஜ் பெற்றுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles