வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார்-நானாட்டான் பஸ் நிலைய பகுதியில் இன்று வியாழக்கிழமை (16) காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் இடம் பெற்றது.
கடும் மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர் களை நினைவு கூறினர்.அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மக்கள்,தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.