சுவிஸ் ஆர்க்காவ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிக பணியகத்தின் பாதூகாவலியாம் புனித லூர்து அன்னையின் விழாவுக்கு இவ் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு 23 வருடங்களில் என்றுமில்லாத மக்கள் வெள்ளம்
சுவிஸ் ஆர்க்காவ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிக பணியகத்தின் பாதூகாவலியாம் புனித லூர்து அன்னையின் திருவிழாவானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.05.2024) காலை 9:30மணிக்கு திருச் செபமாலையுடன் ஆரம்பமாகியது.
இத்திருவிழா திருப்பலியானது சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குனரும் மன்னார் மறைமாவட்டத்தைச் சார்ந்தவருமான வண பிதா முரளி அடிகளாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளரும் தற்போது உரோம் நாட்டில் மேற்படிப்பை மேற்கொள்ளும் வண பிதா றஜனிகாந் அடிகளார் தலைமையில் கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் இருந்து வருகை தந்திருந்த இரண்டு அருட்தந்தையர்களும் கலந்து கொண்டு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியின் இறுதியில் அன்னையின் திருச்சுருவமானது ஆலயத்தை சுற்றி ஆர்ப்பரிப்புக்கள் மன்றாட்டுக்கள் பஜனைகள; இசைக்கப்பட்டு பவனியாக எடுத்து வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குனர் வண பிதா முரளி அடிகளாரின் பிரியாவிடை செபத்துடன் கொழும்பு உயர் மறைமாவட்ட அருட்பணியாளர் யூட் அடிகளார் அவர்களினால் திருச்சுருப இறையாசீர் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.