Wednesday, May 21, 2025

மன்னாரைச் சேர்ந்த இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு யுவதி மருத்துவச் செலவுக்காக உதவி கோருகிறார்.

மன்னாரைச் சேர்ந்த சுகன்யா (வயது- 26)  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து  கடந்த 3 வருடங்களாக இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஓரளவு உடல் நிலை தேறிய நிலையில் வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்து காணப்படுகிறார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த  அவளின் மருத்துவச் செலவுக்காக தமது உடமைகள் அனைத்தையும் விற்றும் ஈடுவைத்தும் செலவளித்த அக் குடும்பம் மீண்டும் உடல்நிலை பாதிக்கப் பட்டிருக்கும் அவளை காப்பாற்ற துடிக்கிறார்கள்.

அவளுக்கு இந்த நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள், வைத்திய சாலையில் இன்மையினால் விலைக்கு பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இக் குடும்பம் உள்ளது.

பிள்ளையை காப்பாற்ற பெற்றோர் போராடுகிறார்கள்.

அத்திய அவசியமாக அவளுக்கு உடனடியாக மருந்து ஏற்றப்பட்ட வேண்டும்.போசாக்கான உணவு கிடைக்க வேண்டும்.

எம் உறவுகளே, தனவந்தர்களே, புலம் பேர் உறவுகளே எம்மாலான உதவிகளை செய்து அவளின் உயிர் காக்க உதவுவோம். நாம் செய்யும் இக்காரியம் நம் தலைமுறையை வாழவைக்கும்.

அவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர்கள் இவ்வங்கி இலக்கத்திற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை  வழங்கி உதவுங்கள். அவர்களது தொலைபேசி இலக்கம் இணைக்கப்படுகிறது. நேரடியாக சென்றும் பார்வையிடலாம்.

மருத்துவ ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
 
Bank details
S.suganya
8124436
Boc
T.p +0094778890659.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles