தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று கலந்துரையாடியுள்ளார்.
மன்னாரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்துக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (15) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.