இந்து தலங்களை பௌத்த மயமாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மற்றும் அது தொடர்பான இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
மத சுதந்திரத்துக்கான உரிமையை அதிகளவில் மீறிவருகின்றனர்.
ஏனைய மக்களை பலிகொடுத்து சிங்கள – பௌத்த தேசியவாதத்தை ஊக்குவிக்கும் மலினமான இந்த நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.