Tuesday, May 13, 2025

தேசிய மட்டத்திற்கு தெரிவான #மட்டக்களப்பு #மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயன்குடா #கண்ணகி வித்தியாலய மகளீர் #எல்லே அணி

கிழக்குமாகாண மாடசாலைகளுக்கிடையிலான 2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வின் குழு நிலை விளையாட்டுக்கள் கடந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் ஆடவர் மற்றும் மகளீர் அணிகளுக்கான எல்லே சுற்றுப் போட்டிகள் கடந்த மூன்று தினங்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்தது.

இவ் எல்லே தொடரில் மகளீருக்கான பிரிவில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மட்/மமே/ காயன்குடா கண்ணகி மகா வித்தியாலய அணி பலம்வாய்ந்த பல பாடசாலை அணிகளை வீழ்த்தி சம்பியனாக தெரிவாகி சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அதி கஷ்ட பிரதேசத்தில் இயங்கும் இப் பாடசாலையினது மகளீர் அணி மாகாணத்தில் சாதித்திருப்பது பாராட்டுக்குரியதே. போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள் வழிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகம் ஆகியோரை மனமுவந்து வாழ்த்துவதுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை பல்துறைசார்ந்தும் வளர்சிப் பாதையினை நோக்கி முன்னகர்த்திக்கொண்டிருக்கும் வலயத்தின் கல்விப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய Y. ஜெயச்சந்திரன் Sir மற்றும் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தேசியத்திலும் சாதிக்க எமது வாழ்த்துகளை சமர்பிக்கின்றோம்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles