Tuesday, May 13, 2025

சமஸ்டி முறையிலான தீர்வு எட்டப்படுமாகில் நாடு முன்னேற்றம் காணும். இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ

சமஸ்டி முறையிலான தீர்வு எட்டப்படுமாகில் நாடு முன்னேற்றம் காணும்.
இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ

சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு காரணமாக. உலகிலே நாகரிகமான நாடுகள் முன்னேறிக் கொண்டு வருகின்றன. இதன் காரணமாகவே இலங்கையிலும் தமிழ் மக்களுக்கும் சமஸ்டி முறையிலான தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என  வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ வியாழக்கிழமை [01.08.2024]  ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தினுள் சமஸ்டி முறையிலான தீர்வை வலியுறுத்தி கடந்த வருடம் ஆவணி மாதம் முதலாம் திகதி நாங்கள் தொடர்ந்திருந்தோம்.

இதற்கு முன்பும் எமது தமிழ் தலைவர்கள் தொடர்ச்சியாக சமஸ்டி முறையிலான தீர்வுக்காக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி இருந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாகவே எமது வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவும் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை வடகிழக்கு மக்களின் ஏகோபித்த ஒரு திர்வாக நாங்கள் இதை முன்வைத்துள்ளோம்.

இந்த சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு காரணமாக. உலகிலே நாகரிகமான நாடுகள் முன்னேறிக் கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இந்த சமஸ்டி முறையிலான தீர்வு காணப்படுகின்றது. இதனாலேயே இது தொடர்பான நாடுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றது.

இதன் அடிப்படையிலேயே வடகிழக்கு பெரும்பாலான தமிழ் மக்கள் இந்த வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஊடாக இத்திட்டத்தை தொடர்ந்து முன்வைக்கின்றோம்.

தமிழ் மக்களின் நீண்டகாலமாக புரையோடி இருக்கின்ற பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதை முன்னிட்டே இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண இணைப்பாளர்  யாட்சன் பிகிராடோ இவ்வாறு ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles