Monday, May 19, 2025

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்கள் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் (jaffna) – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் பிற்பகல் ஆறு மணிக்கு பின்னர் நோயாளர்கள் சுடுநீரை பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையிலுள்ளதாகவும் நோயாளர்களுக்கு பொருத்தமற்ற உணவு விற்பனை செய்யப்படுவமாகவும் நோயாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் 6 மணியுடன் சுடுநீர் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசரமாக சுடுநீர் தேவைப்பட்ட மூவர் நேற்றிரவு 6:45 மணியளவில் சுடுதண்ணீர் பெறுவதற்கு சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்றவர்களிடம் இங்கு 6:00 மணியுடன் சுடுநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு உங்களுக்கு சுடுநீர் அவசியமெனில் 100 ரூபாய் தாருங்கள், மின்சார கேற்றிலில் சுடுநீர் வைத்து தருகின்றேன் என உணவுச்சாலை நடத்துனர் கோரியுள்ளார்.

இதன்போது, 100 ரூபாய் கேட்கப்பட்டதனால் சுடுநீரை பெற்றுக்கொள்ளாமல் அவர்கள் சென்றுள்ளனர்.

இவ்வாறு, நோயாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவியாக நிற்பவர்கள் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

சுடுநீர் பெற சென்றவர்களுடன் உரையாடிய மருத்துவமனை உணவுச்சாலை முகாமையாளர் தம்மிடம் ரூபா 1,40,000 மாதாந்த குத்தகை பெறுவதால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆதார வைத்தியசாலையின் உணவுச்சாலையில் சலரோக, நோயாளர்களுக்கு தேவையான எந்தவிதமான உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடிதாமல் பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், அங்கு பெற்றுக் கொள்ளக் கூடிய உணவுகளாக கொத்துரொட்டி, பிட்டு கொத்து, பரோட்டா, ரொட்டி, சம்பா அரிசி சோறு, வெள்ளை அரிசி சோறு போன்ற நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக சிற்றுண்டிகளாக மஸ்கட், பூந்தி, லட்டு போன்றனவே அதிகளவில் விற்பனையாகின்றன.

யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் தொகுதி உரிய பராமரிப்பின்மையால் செயலிழந்துள்ளது.

இதனால் நோயாளர்கள் ஒரு லீட்டர் குடிநீரை 80 ரூபா பெறுமதியிலேயே பெற்றுக்கொள்கின்றனர்.

மருத்துவ மனையில் பணியாற்றுபவர்கள், விடுதியில் தங்கியுள்ளவர்கள் உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு வெளியேசென்று பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றைய தினம் மருத்துவமனையில் 6ஆம் விடுதயில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளர்கள் பலமணி நேரமாக கட்டில் இன்று கதிரைகளில் அமர்திருந்துள்ளனர். அண்மை நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles