01.08.2024
மன்னார் பேசாலை புனித வெற்றநாயகி ஆலய பங்கின் கீழ் இயங்கி வரும் அமலதாசன் , சென்.மேரிஸ் மற்றும் விக்றரிஸ் ஆகிய மூன்று முன்பள்ளிகள் இணைந்து இந்நடப்பு வருட சிறார்களின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தினர்.
பேசாலை பங்குத் தந்தை அருட்பணி சத்தியராஜ் அடிகளாரின் தலைமையில் வியாழக்கிழமை (01) பனித வெற்றி அன்னையின் ஆலய முன்றலில் நடாத்தப்பட்ட இவ்விளையாட்டு நிகழ்வுகளில் மூன்று முன்பள்ளிகளிலிருந்தும் 161 சிறார்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.