மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் தாயின் மரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுப்பு.

மன்னார் பொது வைத்திசாலையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சார்பில் மக்களுக்கு ஒரு சில அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய கட்டாயம் ஒன்று எற்பட்டுள்ளது.
நாங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரமாக சில நாட்களுக்கு முன்பாக இந்த வைத்தியசாலையில் ஒரு துர்வஷ்டமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.
அதாவது ஒரு இளம் தாய் இவ்வைத்தியசாலையில் சந்தேகத்கிடமாக மரணத்துள்ளார். இச்செய்தி கேள்விப்ட்ட மறுகணமே எங்கள் இவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழு இந்த வைத்தியசாலையின் பணிப்பாளரை நேரடியாக வந்து சந்தித்து கலந்துரையாடினோம்.
இந்த விடயம் தொடர்பாக அவர் எங்களுக்கு தெரிவிக்கையில் இச்சம்பவம் தொடர்பாக எங்கள் நிர்வாகத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.