Wednesday, May 21, 2025

லொறியின் காற்றை பிடுங்கிய பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்

வத்தளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் முன் சக்கரத்தின் காற்றை பிடுங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

குறித்த பொலிஸ் சார்ஜன்டின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், எனவே குறித்த அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், அவரிடம் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீதியின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தமையினால் இவ்வாறு சக்கரத்தின் காற்றை பிடுங்கியதாக பொலிஸ் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles