இஸ்ரேலில் உள்ள 70% இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்- இலங்கை தூதுவர் தெரிவிப்பு!
இஸ்ரேலில் தற்போது பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங் கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்றபடவில்லையென இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியை இலக்கு வைத்து ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புகள் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதுடன் இந்தத் தாக்குதல்கள் தானியங்கி வான் பாதுகாப்பு அமைப்பினூடாக முறியடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் பணியாற்றும் 70 சதவீதமான இலங்கையர்கள் பராமரிப்பாளர்களாக உள்ளதுடன் அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருப்பதனால் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.