Tuesday, May 13, 2025

கட்டுப்பணத்தை செலுத்தினார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரதன தேரர் அக்மீமன தயாரதன தேரர் மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.

இதேவேளை 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 15 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles