Wednesday, May 21, 2025

ஆனையிறவு விபத்தில் உயிரிழந்தவர் விபரம் வெளியானது

கிளிநொச்சி – ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து

இதன்போது இராணுவத்தின் சோதனைச் சாவடியுடன் மோதி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசுவமடு ரெட்பானா பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும் 21 வயது உடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொசமேலும் , விபத்து சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles