Monday, May 19, 2025

தங்கமலை பகுதியில் லொறி விபத்து; சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் நேற்று (08) வியாழக்கிழமை இரவு வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையிலிருந்து அப்புத்தளை வரை உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அரிசி மூடைகளை இறக்கிவிட்டு ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து அப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வீதியானது செங்குத்தான மற்றும் வளைவுகள் கொண்ட பகுதி என்பதால் இந்த இடத்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Stay Connected

45,689FansLike
32,689FollowersFollow
25,968FollowersFollow

Latest Articles