ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையான 42 வயதுடைய அசனார் மர்சூக் என்ற குடும்பஸ்தர் நேற்று (11/08) மாலை தனது வீட்டின் வளையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து முறன்பாடே தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற , பிரதேச மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம். எஸ்.எம்.நஸீர் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாரை பணித்தார்.குறிப்பிடத்தக்கது